தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா? பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா! எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா? தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா? தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா? செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா? தில்லி நரிதான் நடுங்கிற்றா […]Read More