About Author

sowmitamil

https://agazh.in/

 யாதுமாகி

யாதுமாகி

காலைக் கதிரவன் உன் விழித் திறக்கும் ஒளியினால்… இரவில் சந்திரன் உன் முகம் சிந்தும் வண்ணத்தினால்.. வானமும், பூமியும் வெற்றிடம் ஏதுமின்றி உன் மூச்சுக்காற்றால் நிறைய… நீளும் சாலையெங்கும் உன் நினைவுகளாய் விரிய… பின்தொடர்கிறேன் உன் நினைவலைகளை பற்றிய படி நான்.. ஆம் விண்ணும் நீ மண்ணும் நீ… உயிரும் நீ உணர்வும் நீ… எங்கு நோக்கினும் என் யாதுமாகி நின்றாயடிக் கண்மணி..!Read More

 யார் நீ… ?

யார் நீ… ?

மும்முரமான அலுவல்களில் மூச்சு விடும் சில மணி துளிகளில் வந்து செல்லும் இதழோர புன்னகை… கூட்ட நெரிசல்களை கடந்த யாரும் அல்லா சாலையில் நானும் வாகனமும் வேகமெடுத்து இயங்கிக் கொண்டிருக்க இதயத்தை மட்டும் இயங்க விடாமல் இழுத்துப் பிடிக்கும் நினைவலைகளின் சங்கமம்… பெயர் தெரியா குழந்தையிடம் காட்டும் குறும்புத்தனம்… ஆயிரம் பேர் கொண்ட அவையில் நடுக்கமேதுமின்றி ஓங்கி ஒலிக்கும் என் குரலின் பின்னணி.. யார் நீ… ஆம் நானே நீ.. யாவும் நீ..Read More

 உன் பெயர்

உன் பெயர்

புதிதாய் வாங்கிய பேனாவிற்கு அனிச்சையாய் மூளை இடும் முதல் கட்டளை… ! கடைக்காரரின் பிரத்தியேக பேனா பரிசோதிப்பு தாளில் பல கிறுக்கல்களுக்கு மத்தியில் பளிச்சிடும் ஒற்றை வரி கவிதை…Read More

 வேண்டும் விடுதலை ..!

வேண்டும் விடுதலை ..!

எனதா …. இல்லை உனதா…என் கண்கள்..?! நீ இருக்கும் திசை நோக்கியே… பாய்கிறதே….!! துரோகத்திற்கு தண்டனையாய்…. என் இமைக் கொண்டு மூட நினைக்கையில்.. உன் பிம்பத்தை சிறை பிடித்து… என் இமையையே திரையாக்கி… அதில் பிரதிபலித்துக் காட்டுகின்றன… அவ்விரு பாவிகள்… போனால் போகட்டும் நானிருக்கிறேன் உனக்கு…. என என் இதயம் அழைக்கையில்… இதோ என் நிம்மதி என்று ஓடோடி போனேன்… ஆனால் துடிக்கும் போது மட்டும் அவளின் பெயரை உச்சரிப்பேன் பொறுத்துக்கொள் என்றது..அது… தஞ்சம் தேடி வந்தவனை […]Read More

 காத்திடுவாயோ…கண்ணே..

காத்திடுவாயோ…கண்ணே..

கத்தி ஏந்திய கண்கள் இரண்டும்…. ஒரு பார்வையால் எனை சாய்த்திட… காதல் எனும் கை கொடுத்து எனை காத்திடுவாயோ..?! அல்ல… இதயம் திருட வந்த கள்வன் இவன்… என்றென்னி…. எட்டி மிதித்து கடந்து போவாயோ….?! உயிர் போகும்…. நொடியில்.. உன் கரம் பிடித்து… இரைஞ்சுகிறேன்…. காலம் அது… நம் காதல் கவியை‌ பாட காத்துக்கிடக்கிறது… இதழ் திறந்து.. என் காதல் நீ என…. உரக்க உரைத்து.. என் உயிரை… காத்திடுவாயோ…அன்பே?!Read More

 அண்ணா…

அண்ணா…

உன்னுடன் இருக்கும் தருணம்… விளக்கிச் சொல்ல வார்த்தைகள்.. இல்லை என்னிடம்… காலம் முழுதும் என் நாட்கள்.. உன் கரம் பிடித்தே நகர வேணும் வரம் தருவாயோ அண்ணா…?! HAPPY NATIONAL BROTHERS DAY…Read More

 ஒரு முறை உனை காண்பேனோ?!

ஒரு முறை உனை காண்பேனோ?!

சாளரத்தின் வழியே நிலவை ரசித்துக்கொண்டிருக்கிறேன்… வானம் அனைவருக்கும் ஒன்று எனில் உன் கண்களை சிறுது நேரம் கடன் தா.. வெண்ணிலவே .. அதன் வழியே.. என்னவளை.. ஒருமுறை கண்டுவிட்டு தருகிறேன்…Read More

 விடை தருவாயோ?!

விடை தருவாயோ?!

நீயும் நானும் அலையும் ..கரையும்.. இதுவரை இந்த இடைவெளி நீளும்.. விடை தேடி அலைந்து உன் விழியில் விழுகையில் விடைக்கு பதிலாக வினாக்களை அளித்தது ஏனோ கண்மணியே..!?Read More