கவிதைகள்

அம்மா..

அம்மா..
என்னை எழுதிய கவிதைக்கு…
நான் எழுத முயற்சிக்கும்…
அன்பு கவிதை..
 
உன் அன்பை வர்ணிக்க..
வார்த்தைகள்..தேடி தோற்று போகிறேன்..
அன்பென்ற சொல்லிற்கு அகராதி நீ தானோ….! 
 
உலகில் அதிசயங்கள் பல இருக்க…நான் வியந்து பார்க்கும்..
ஒற்றை அதிசயம்..நீ.
தவம்..செய்தால்தான்..
வரம் கிடைக்கும். ஆனால்..
நான் தவம் ஏதும்.. செய்யாமல் கிடைத்த வரம் நீ..
கை பிடித்து நடக்க கற்று தந்தாய்…
பின் சுதந்திர வானில் பறக்க கற்று தந்தாய்…
நான் பிறந்த நாள் முதல்..இன்று வரை 
என்னை பற்றி மட்டுமே..சிந்திக்கிறாய்..
கைமாறு ஏதுமின்றி..
என் இறுதி மூச்சு வரை உன் மடியிலே நானிருக்கும்..
வரம் மட்டும்..
தருவாயா அம்மா..!
 
                                                                                              
Spread the love
About Author

sowmitamil

https://agazh.in/

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *