உன் மீதான என்
காதலை சொல்ல
தாய் மொழியிலும்
கூட வார்த்தைகள்
போதவில்லை…
வார்த்தைகள் தேடிக்
கிடைப்பினும்
விவரித்துச் சொல்ல
தைரியம் அது போதவில்லை…
உன் கண்கள்.. !
உலகத்தையே உன்
ஒற்றை பார்வை அது
விழுங்கிவிடுமெனில்.,
நான் அதில் ஒரு துகள்
அல்லவே..!
என் காதல் அதை கையில் ஏந்தி
காத்திருக்கிறேன்…
உன் ஓரப் பார்வையேனும்
என் மீது நிலைத்து நிற்காதா என்று…
என்னோடு நீ வேண்டும்
பல ஆண்டுகளாய்
என் பிராத்தனையின்
இறுதி வரி இதுவே..
இறைவா என்னால்
இயலவில்லை..
நீயேனும்
எடுத்துரைப்பாயா
என்னவளிடம்..
அவளுக்கான் என்
இதயத்தை…?!