யாதுமாகி

யாதுமாகி

காலைக் கதிரவன் உன் விழித் திறக்கும் ஒளியினால்… இரவில் சந்திரன் உன் முகம் சிந்தும் வண்ணத்தினால்.. வானமும், பூமியும் வெற்றிடம் ஏதுமின்றி உன் மூச்சுக்காற்றால் நிறைய… நீளும் சாலையெங்கும் உன் நினைவுகளாய் விரிய… பின்தொடர்கிறேன் உன் நினைவலைகளை பற்றிய படி நான்.. ஆம் விண்ணும் நீ மண்ணும் நீ… உயிரும் நீ உணர்வும் நீ… எங்கு நோக்கினும் என் யாதுமாகி நின்றாயடிக் கண்மணி..!Read More

 என் காதல்

என் காதல்

உன் மீதான என் காதலை சொல்ல தாய் மொழியிலும் கூட வார்த்தைகள் போதவில்லை… வார்த்தைகள் தேடிக் கிடைப்பினும் விவரித்துச் சொல்ல தைரியம் அது போதவில்லை… உன் கண்கள்.. ! உலகத்தையே உன் ஒற்றை பார்வை அது விழுங்கிவிடுமெனில்., நான் அதில் ஒரு துகள் அல்லவே..! என் காதல் அதை கையில் ஏந்தி காத்திருக்கிறேன்… உன் ஓரப் பார்வையேனும் என் மீது நிலைத்து நிற்காதா என்று… என்னோடு நீ வேண்டும் பல ஆண்டுகளாய் என் பிராத்தனையின் இறுதி வரி […]Read More