அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 10:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 10:

குறள் 9: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் விளக்கம்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.Read More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 9:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 9:

குறள் 9: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை விளக்கம்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்Read More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 8:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 8:

குறள் 7: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாதுRead More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 7:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 7:

குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது விளக்கம்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாதுRead More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 6:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 6:

குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் விளக்கம்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்Read More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 5:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 5:

குறள் 5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லைRead More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 4:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 4:

குறள் 3: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விளக்கம்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லைRead More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 3:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 3:

குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் விளக்கம்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்Read More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 2:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 2:

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் விளக்கம்: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?Read More

 அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 1:

அதிகாரம்: கடவுள் வாழ்த்து, குறள் 1:

குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.Read More