அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 20:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 20:

குறள் 20: நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 19:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 19:

குறள் 19: தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 18:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 18:

குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு விளக்கம்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாதுRead More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 17:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 17:

குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் விளக்கம்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 16:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 16:

குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது விளக்கம்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாதுRead More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 15:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 15:

குறள் 15: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை விளக்கம்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 14:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 14:

குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் விளக்கம்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 13:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 13:

குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 12:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 12:

குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்Read More

 அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 11:

அதிகாரம்: வான்சிறப்பு, குறள் 11:

குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று விளக்கம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்Read More