அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 30:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 30:

குறள் 30: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் விளக்கம்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 29:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 29:

குறள் 29: குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 28:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 28:

குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் விளக்கம்: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 27:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 27:

குறள் 27: சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 26:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 26:

குறள் 26: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் விளக்கம்: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 25:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 25:

குறள் 25: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 24:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 24:

குறள் 24: உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 23:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 23:

குறள் 23: இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு விளக்கம்: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்ததுRead More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 22:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 22:

குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று விளக்கம்: பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.Read More

 அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 21:

அதிகாரம்: நீத்தார் பெருமை, குறள் 21:

குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு விளக்கம்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.Read More