எனதா …. இல்லை
உனதா…என் கண்கள்..?!
நீ இருக்கும் திசை நோக்கியே…
பாய்கிறதே….!!
துரோகத்திற்கு தண்டனையாய்….
என் இமைக் கொண்டு
மூட நினைக்கையில்..
உன் பிம்பத்தை
சிறை பிடித்து…
என் இமையையே
திரையாக்கி…
அதில் பிரதிபலித்துக்
காட்டுகின்றன…
அவ்விரு பாவிகள்…
போனால் போகட்டும்
நானிருக்கிறேன்
உனக்கு….
என என் இதயம் அழைக்கையில்…
இதோ என் நிம்மதி என்று ஓடோடி போனேன்…
ஆனால் துடிக்கும் போது மட்டும்
அவளின் பெயரை உச்சரிப்பேன் பொறுத்துக்கொள் என்றது..அது…
தஞ்சம் தேடி வந்தவனை நீயும்
வஞ்சித்தாயே…என்
நெஞ்சமே…
என்று நொந்து போனேன்..
இப்படி எனதெல்லாவற்றையும்.
உனதாக்கிக்கொண்டு
உயிரை மட்டும்
உடலோடு விட்டுவைத்ததேனோ..?!
பூரண விடுதலையை
கேட்கவில்லை…
உனை நினையாத
ஒரு நாழிகையேனும்..
வரமாக தா….
இல்லையேல்…
நான் பெற்ற அனைத்து
வேதனையையும்..
நீயும் பெற போராடுவேன்…🤣