தேவையான பொருள்கள்;
- ரவா – 1 கப்
- சீனி – ¾ கப்
- முந்திரி -10
- திராட்சை – 5 optional
- ஏலக்காய் – 2 (பொடித்தது) optional
- கேசரி powder – 1 spoon
- நெய் – 7 spoon
- தண்ணீர் – 2 கப்
செய்முறை:
கடாயில் 2 spoon நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்ச்சயை
போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். (முந்திரி பொன்னிறமாக மாறும் வரை திராட்சை பந்து போன்று உப்பி வரும் வரை) பின்னர் அவற்றை எடுத்து விட்டு முந்திரி வறுத்த அதே நெய்யில் ராவாவை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். 2 நிமிடம் வறுத்தெடுத்தால் போதுமானது.
அடுத்து ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். (1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் என்பது அளவு) தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர்
அதில் ¾ கப் சீனியை போட்டு கிளறி விடுங்கள்.அடுத்து ரவையைக் கொட்டி கிளருங்கள். கொட்டும்போது கிளரி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையானால் கட்டி பிடித்து விடும். எனவே ஒரு கையால் ரவையை கொட்டிகொண்டே மறு கையால் கிளரிவிட்டுக்கொண்டிருங்கள்.
இப்பொழுது தண்ணீர் வற்றி ரவா வெந்த நிலையில் 1 spoon கேசரி பவுடரை சிறுது தண்ணீரில் கலந்து அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு 5 spoon நெய்யை ஒரு ஒரு ஸ்பூன் ஆக ஊற்றி கிளரி விட்டுக்கொண்டே இருங்கள்.
கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் இதுவே பதம். இதில் இறுதியாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடித்தது போன்றவற்றை சேர்த்து கடைசியாக சில முறை கிளரி இறக்கிவிட்டால் கேசரி தயார்.